snapdeal

Sunday, November 20, 2016

தேர்வில் தோல்வி தங்கையுடன் ஒரே வகுப்பில் படித்ததால் விரக்தியில் மாணவி தற்கொலை||Failed-exam-with-sisterBy-studying-in-the-same-classStudent

தேர்வில் தோல்வி தங்கையுடன் ஒரே வகுப்பில் படித்ததால் விரக்தியில் மாணவி தற்கொலை||Failed-exam-with-sisterBy-studying-in-the-same-classStudent

பூந்தமல்லி,

தேர்வில் தோல்வி அடைந்து தங்கையுடன் ஒன்றாக 6–ம் வகுப்பு படித்து வந்ததால் விரக்தி அடைந்த மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6–ம் வகுப்பு மாணவி

மதுரவாயலை அடுத்த நூம்பல், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகள் சவுமியா (வயது 13). இவர், வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வந்தார்.
சவுமியாவுக்கு படிப்பு சரியாக வராது என்று கூறப்படுகிறது. இதனால் 8–ம் வகுப்பு படிக்க வேண்டிய சவுமியா, தேர்வில் தோல்வி அடைந்ததால் 6–ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது அவருடைய தங்கையும், சவுமியாவுடன் ஒன்றாக 6–ம் வகுப்பு படித்து வருகிறார்.
தூக்குப்போட்டு தற்கொலை

தேர்வில் தோல்வி அடைந்து, தனது தங்கையுடன் ஒன்றாக சேர்ந்து படித்து வந்ததால் மாணவி சவுமியா மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சவுமியா, தனது அறைக்குள் சென்று விட்டார்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவருடைய பெற்றோர், அறை கதவை திறந்து பார்த்தனர். அப்போது அறையின் உள்ளே சவுமியா, தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சவுமியா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

FREE DOWNLOAD