snapdeal

Saturday, July 2, 2016

சுவாதி கொலையில் பிடிபட்ட ராம்குமாரை சென்னைக்கு கொண்டுவர தயார் .


சென்னை, சென்னை பெண் என்ஜினீயர் சுவாதி கொலையில் பிடிபட்ட ராம்குமாரை சென்னைக்கு கொண்டுவர 3 மருத்துவர்கள் கொண்ட குழு தயார் நிலையில் உள்ளது. பெண் என்ஜினீயர் சுவாதியை கொன்ற கொலைகாரன் ராம்குமாரின் சொந்த ஊரான செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்திலும், ராம்குமார் சிகிச்சை பெற்று வரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுவாதி கொலை நடந்தது சென்னை நுங்கம்பாக்கம் என்பதால், போலீசார் ராம்குமாரை சென்னைக்கு அழைத்துவர வேண்டியுள்ளது. ஆனாலும் நெல்லையில் மாஜிஸ்திரேட்டு முன்பு அவரை ஆஜர்படுத்திய பின்னரே சென்னைக்கு அழைத்து வரப்படலாம் என்று தெரிகிறது.இதற்காக நேற்று நெல்லை மாஜிஸ்திரேட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாலை வரை மாஜிஸ்திரேட்டு வரவில்லை. ராம்குமாருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவக்குழுவினர், அவரை உடனடியாக சென்னைக்கு அழைத்துச் செல்வது சரியாக இருக்காது என்று கூறினர். இதையடுத்து ராம்குமாரை சென்னைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. எனவே இன்று( ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளை ராம்குமார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவ வசதிகளுடன் சென்னைக்கு அழைத்துவர வாய்ப்பு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் பிடிபட்ட ராம்குமாரை சென்னைக்கு கொண்டுவர 3 மருத்துவர்கள் கொண்ட குழு தயார் நிலையில் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ராம்குமார் சென்னை அழைத்துவரப்பட உள்ளார். கொலையாளி ராம்குமாரிடம் திருநெல்வேலி நீதிபதி ராமதாஸ் விசாரணை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து ராம்குமார் சென்னை அழைத்து வரப்படுகிறார்

News source dailythanthi

No comments:

Post a Comment

FREE DOWNLOAD