snapdeal

Wednesday, June 8, 2016

வாடிப்பட்டி அருகே டீக்கடைக்காரர் படுகொலை: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்தோம் கைதான மனைவி, லோடுமேன் வாக்குமூலம்


வாடிப்பட்டி, வாடிப்பட்டி அருகே நடந்த டீக்கடைக்காரர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவரது மனைவி, லோடுமேன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.டீக்கடைகாரர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி சடையாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் கணேசன் (வயது 43). இவருக்கு திருமணமாகி ராஜாத்தி (32) என்ற மனைவியும், சசிக்குமார்(18) என்ற மகனும், பிரியா(16) என்ற மகளும் உள்ளனர். கணேசன் கட்டக்குளம் பிரிவு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் பெட்டிக்கடையுடன் டீக்கடை மற்றும் லாரிகளுக்கு பஞ்சர் பார்க்கும் வல்கனைசிங் கடையும் நடத்தி வந்தார்.கடையின் ஒரு பகுதியில் குடிசை அமைத்து அதில் வடை, பஜ்ஜி தயாரித்து வந்தார். அதனால் இரவு நேரங்களில் அங்கேயே படுத்து தூங்கி விடுவார். இந்தநிலையில் கடந்த மாதம் 12–ந்தேதி இரவு கணேசன் கடைக்குள் படுகொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். முகம், தலை, கைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்து இருந்தது.கள்ளக்காதல் தடயவியல் நிபுணர் கைரேகை பதிவு செய்தார். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் இருந்து கணேசன் வீடு வரை சென்று நின்று விட்டது. இந்த கொலையை யார் செய்தது? எதற்காக செய்தார்கள்? தொழில் போட்டியா? நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டதற்கு கள்ளத்தொடர்பு காரணமா? என்று பல கோணங்களில் வாடிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.மேலும் இந்த கொலை சம்பந்தமாக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திரபிதாரி உத்தரவின்பேரில் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் ஆலோசனையின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ், முத்துகுமார், ஏட்டுகள் விஜய், சரவணக்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் கணேசனின் மனைவி மற்றும் மகனிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வந்தனர். அப்போது பெருமாள்பட்டியை சேர்ந்த பாஸ்கர் மகன் லோடுமேன் பிரேம்குமாருக்கும், ராஜாத்திக்கும் கள்ளகாதல் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மனைவியை பிடித்து விசாரணை நடத்தினர்.வாக்குமூலம் இதுபற்றி தெரிந்ததும் பிரேம்குமார் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரணடைந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். அதில் ராஜாத்தியுடனான கள்ளக்காதலுக்கு கணவர் கணேசன் இடையூறாக இருந்ததாலும், அடிக்கடி குடித்துவிட்டு மனைவியையும், மகனையும் அடித்து சித்ரவதை செய்ததாலும், ராஜாத்தியுடன் சேர்ந்து கணேசனை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ராஜாத்தியும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த மகன் சசிக்குமாரையும் வாடிப்பட்டி போலீசார் கைது செய்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

news source dailythanthi

No comments:

Post a Comment

FREE DOWNLOAD