snapdeal

Sunday, June 5, 2016

போதையில் ரகளை செய்து பெண் போலீசாரை தாக்கிய 5 இளம்பெண்கள் உள்பட 6 பேர் கைது .

நவிமும்பை, போதையில் ரகளை செய்து பெண் போலீசாரை தாக்கிய 5 இளம்பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.பிறந்தநாள் விழா நவிமும்பை வாஷியில் உள்ள ரகுலீலா வணிகவளாகத்தில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்றுமுன்தினம் ஒரு இளம்ஜோடி பிறந்தநாள் விழா கொண்டாடினர். இதில், கலந்து கொண்டவர்களுக்கு மது விருந்து அளிக்கப்பட்டது. மது அருந்திய அந்த ஜோடி திடீரென போதையில் அருகில் இருந்த 2 இளம்பெண்களிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இந்த தகராறு முற்றியதில் 4 பேரும் உணவகத்தின் வெளியே வந்து சண்டையிட்டு கொண்டிருந்தனர்.இதை பார்த்து அங்கு ஏராளமானவர்கள் திரண்டனர். அதில், சிலர் வாஷி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபர் உள்பட 4 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு போலீசாரிடம் நான்கு பேரும் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.6 பேர் கைது இதுபற்றி அறிந்ததும் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஜோடியின் உறவினர்களான 2 இளம்பெண்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர்களும் போலீசாரை வாய்க்கு வந்தபடி திட்டி ரகளையில் ஈடுபட்டனர். இதற்கிடையே, போலீசார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு நவிமும்பை மாநகராட்சி மருத்துவமனைக்கு வரும்படி அழைத்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்து 6 பேரும் சேர்ந்து அங்கிருந்த பெண் போலீசார் இருவரை சரமாரியாக தாக்கினார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற போலீசார் 6 பேரையும் கைது செய்தனர்.அவர்கள் மீது 6 குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், கைதான 5 இளம்பெண்களின் பெயர் சேனால்(வயது25), சுவாதி(27), பூர்ணிமா(24), ஜியோட்சனா(24), லிபிஸ்ரீ(25), வாலிபர் பெயர் அபுர்ப் சுக்லா(27) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

No comments:

Post a Comment

FREE DOWNLOAD