லக்னோ, அரியானாவில் பள்ளி ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரியானாவில் உள்ள ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையில் பணியாற்றுபவர்கள் ஜீன்ஸ் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டுமே தவிர கலாச்சாரம் சீரழியும் விதமாக ஆசிரியர்கள் நடந்துகொள்ள கூடாது. இவ்வாறு அம்மாநில அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரியானா அரசின் இந்த உத்தரவால் ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அரியானா மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 50,000க்கும் மேற்பட்டவர்கள் 40 வயதிற்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற ஆடை கட்டுப்பாடு ஒடிசா உட்பட மாநிலத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது நினைவுகூறத்தக்கது.
news source dailythanthi
No comments:
Post a Comment