snapdeal

Sunday, November 27, 2016

தேர்தல் முடிந்து விட்டது ’மறுவாக்கு எண்ணிக்கை மோசடி’ டொனால்டு டிரம்ப் ஆவேசம்||Trump-slams-recount-move-as-a-scam-says-election-is

தேர்தல் முடிந்து விட்டது ’மறுவாக்கு எண்ணிக்கை மோசடி’ டொனால்டு டிரம்ப் ஆவேசம்||Trump-slams-recount-move-as-a-scam-says-election-is


வாஷிங்டன், 

தேர்தல் முடிந்த நிலையில் மறுவாக்கு எண்ணிக்கை மோசடி என டொனால்டு டிரம்ப் ஆவேசமாக கூறி உள்ளார். 

உலகிலேயே சக்திவாய்ந்த பதவியாக கருதப்படுவது அமெரிக்க ஜனாதிபதி பதவி. தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து வரும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்காக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும் (வயது 69), குடியரசு கட்சியின் சார்பில் தொழில் அதிபரான டொனால்டு டிரம்பும் (70) போட்டியிட்டனர். கடந்த 8-ந்தேதி நடந்த தேர்தலில்குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார். இவர் ஹிலாரி கிளிண்டனை விட மக்கள் வாக்கு எனப்படும் பாப்புலர் ஓட்டுகளை குறைவாக பெற்றுள்ளார். 

அமெரிக்க முறைப்படி அதிபரின் வெற்றியை தேர்வாளர் வாக்குகள்தான் நிர்ணயிக்கும். அந்த வகையில் ஹிலாரியை விட டிரம்ப் கூடுதல் தேர்வாளர்களை பெற்று வெற்றி பெற்றார். இதற்கிடையே விஸ்கான்சின், மிக்சிகான் மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் ஹிலாரி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக அங்கு டிரம்ப் வென்றார். எனவே அங்கு முறைகேடு நடந்ததாக கூறி தேர்தலில் போட்டியிட்ட கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்பெயின் விஸ்கான்சின் மாகாணத்தில் மறுஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் மனு செய்துள்ளார். 

அதே போன்று மிக்சிகான், பென்சில்வேனியாவிலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு மனு செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

 இதற்கிடையே கிரீன் கட்சி வேட்பாளரின் கோரிக்கையை ஹிலாரி கிளிண்டன் தரப்பும் ஆதரித்துள்ளது. அது குறித்து ஹிலாரியின் பிரசார குழுவை சேர்ந்த மார்க் இலைஸ் கூறும்போது, ‘‘தேர்தல் முடிவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார். 
அதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கிரீன் கட்சி வேட்பாளர் மறுவாக்கு எண்ணிக்கைக்கு மனு செய்தது தேவையற்றது. இது ஒருவகை மோசடியாகும். தேர்தல் முடிவு மக்களால் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து விட்ட நிலையில் இத்தகைய கோரிக்கை தேவையற்றது என கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுக்கு சவாலை ஏற்படுத்துவது மற்றும் தவறாக பயன்படுத்துவதற்கு பதிலாக மதிப்பளிக்க வேண்டும் என்று டிரம்ப் கூறிஉள்ளார். 

No comments:

Post a Comment

FREE DOWNLOAD