snapdeal

Tuesday, November 8, 2016

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது பிரதமர் மோடி நடவடிக்கை ரஜினி- குஷ்பு வரவேற்பு

சென்னை,


கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இந்த அதிரடி நடவடிக் கையால், கோடிக்கணக்கில் பணம் புரளும் திரைப்படத் துறை பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவியது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு சினிமாவை சேர்ந்த பலர் ஆதரவு தெரிவித்து உள் ளனர்.

பிரதமரின் திடீர் நட வடிக்கைக்கு வரவேற்பு தெரிவிக்கும் கருத்துக்களை ரஜினிகாந்த், குஷ்பு உள்பட பலர் தெரிவித்து இருக் கிறார்கள். அதன் விபரம் வருமாறு:-

நடிகர் ரஜினிகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘நரேந்திரமோடி ஜி’ க்கு வாழ்த்துக்கள். புதிய இந்தியா பிறக்கிறது. ஜெய்ஹிந்த் என்று குறிப்பிட்டுள்ளார்.
குஷ்பு தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் பெரிய உயிர்க்கொல்லி நோயாக இருப்பது கருப்பு பணம் என்றும், அதனை வேறோடு ஒழிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
‘இத்திட்டத்தினை 4 மாதங்களாக மிகவும் ரகசியமாக செய்துவந்ததற்காக முதலில் பிரதமர் மோடியை பாராட்டியே ஆக வேண்டும்’,‘ இச்செய்தியை கேள்விப்பட்டவுடன் கருப்பு பணம் வைத்திருக்கும் பலரும் கோமா நிலைக்கு தள்ளப்பட்டிருப்பர், ஏனெனில் அப்பணம் இப்போதைக்கு வெற்றுக் காகிதம் ஆகியிருக்கும் என்றும், பலரும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த அப்பணத்தை அழுதபடியே கட்டிப்பிடித்துக்கொண்டு இருப்பர்’ என்று கூறியுள்ளார்.
ஆயினும் தினக்கூலியாக வேலை செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர், அவர்கள் தங்களது அன்றாட தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
I will appreciate #PM 4 keeping the move in such a secrecy 4 months..heard many hve gone in2 coma as blackmoney is jus a waste paper now😉😉😂😂
— khushbusundar (@khushsundar) November 8, 2016


தனுஷ் தனது டுவிட்டர் செய்தியில், இது பிரதமர் மோடியின் அற்புதமான வரலாற்று நடவடிக்கை இதற்கு மதிப்பளிப்போம் என்று கூறி இருக்கிறார்.இசை அமைப்பாளர் அனிருத் ‘பிரதமரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைக்கு சல்யூட்’ என்று கூறி இருக்கிறார்.

அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நான் பிரதமரின் அதிரடி நடவடிக்கையை வரவேற்கிறேன். நாட்டின் நலனை தட்டி எழுப்ப பிரதமர் எடுக்கும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது தவிர சமீபத்தில் திரைக்கு வந்த ‘ பிச்சைக்காரன்’ படத்தில் , இயக்குனர் மூர்த்தி எப்.எம்.ரேடியோவுக்கு கருத்து சொல்வதாக வரும் காட்சியில் “ நம்ம நாடு  வறுமையில் இருப்பதற்கு காரணம் ஊழல் பணம், வரிகட்டாம ஏமாத்துறபணம், பதுக்கிற பணம் எல்லாமே 500 ரூபாய் 1000 ரூபாய் தான். நம்ம நாட்டில் 20 சதவீதம் பேர்தான் 500, 1000 நோட்ட பயன்படுத்துகிறாங்க. இந்தியா வல்லரசு ஆக ஓரே வழி 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பது தான்” என்று பேசுவார். இந்த காட்சி வாட்ஸ்-அப் பில் வேகமாக பரவுகிறது. இதை ஏராளமானோர் வரவேற்று கருத்து தெரிவித்து உள்ளனர்.

dailynews


No comments:

Post a Comment

FREE DOWNLOAD