snapdeal

Wednesday, November 9, 2016

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவு

நாமக்கல்,
நாமக்கல் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் உள்பட 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டு உள்ளார்.
பாலியல் பலாத்காரம்விழுப்புரம் மாவட்டம் ஆண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சக்திவேல் (வயது 23). இவர் நாமக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியில் உள்ள செங்கல்சூளையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 15 வயது நிரம்பிய பள்ளி மாணவியை திருமண ஆசைக்காட்டி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக நாமக்கல் மகளிர் போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் 29–ந் தேதி சக்திவேலை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஏற்கனவே 15 வயது நிரம்பிய இளம்வயது பெண்ணை திருமணம் செய்து இருப்பது தெரியவந்தது.
குண்டர் சட்டத்தில் கைது இவருக்கு உடந்தையாக இருந்ததாகவும், சக்திவேல் ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் இவரது நண்பர் முருகன் (26) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து சக்திவேல், முருகன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டார்.

dailythanthi


No comments:

Post a Comment

FREE DOWNLOAD