snapdeal

Thursday, June 16, 2016

ராஜஸ்தானில் கொடூரம்; ஏ.டி.எம். காவலாளி கொடூரமான முறையில் திருடர்களால் அடித்துக் கொலை .

ஜெய்பூர், ராஜஸ்தானில் ஏ.டி.எம். காவலாளி கொடூரமான முறையில் திருடர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக இரத்தத்தை உரையசெய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஷிதாவாவில் உள்ள ஏ.டி.எம். ஒன்றில் காவலாளியாக பணியாற்றுபவர் இரவில் ஏ.டி.எம். அறைக்குள் தூங்கிஉள்ளார். அப்போது திருடர்கள் ஏ.டி.எம்.மை கொள்ளையடிக்க உள்ளே வந்து உள்ளனர். உள்ளே வந்தவர்களில் ஒருவன் தூங்கிக் கொண்டிருந்த காவலாளியை கட்டையினால் கொடூரமான முறையில் அடித்து உள்ளான். இதில் காவலாளி தூக்கத்திலே உயிரிழக்கிறார். இச்சம்பவம் தொடர்பான கொடூரமான வீடியோ காட்சிகள் இணையங்களில் பரவி வருகிறது. பின்னர் திருடர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பி உள்ளனர்.  இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் போலீசார் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். வீடியோவில் பதிவாகிஉள்ள இளைஞர்கள் தங்களுடைய முகத்தை துணியால் மூடிஉள்ளனர். இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது. ஒருவாரத்திற்கு முன்னதாக ஜோத்பூரில் ஏ.டி.எம். அறையில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். ஏ.டி.எம்.ல் அவர் பணம் எடுத்ததை வெளியில் இருந்து பார்த்தவன் உள்ளே சென்று கத்தியால் குத்திஉள்ளான் இதுதொடர்பான காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியது. ஆனால் கத்தியால் குத்தப்பட்டவர் அபாய ஒலி எழுப்பியதால் கொள்ளையன் ஓடி சென்று அருகே மோட்டார் சைக்கிளில் நின்றவனுடன் தப்பி ஓடிவிட்டான். இதுதொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை அதிகரிக்க செய்து உள்ளது

news source dailythanthi

No comments:

Post a Comment

FREE DOWNLOAD