snapdeal

Sunday, June 12, 2016

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையை கொலை செய்த மகள்; போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் .


கோவை,

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையை காதலன் உதவியுடன் மகள் கொலை செய்த திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.விவசாயி கொலை

கோவை சொக்கம்புதூரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55). இவருக்கு பிரமிளா (42) என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். விவசாயியான நாகராஜ் நெகமம் அருகே தேவணாம்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்துக்கு வாரத்துக்கு ஒரு நாள் சென்றுவருவார்.

கடந்த மாதம் 23-ந்தேதி தோட்டத்துக்கு சென்றிருந்தபோது தேவணாம்பாளையம் அருகே அவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவருடைய மகள் மகாலட்சுமியே, தனது காதலன் சதீசுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.மகள் கோர்ட்டில் சரண்

இந்த கொலை வழக்கு தொடர்பாக சதீசின் நண்பர் கள் மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன்(19), கிருஷ்ணகுமார் (19), சசிக்குமார் (20), சந்தோஷ்குமார் (20) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மகாலட்சுமி, தனது காதலன் சதீசுடன் நேற்று முன்தினம் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். நீதிபதி அவர்களை 17-ந்தேதி பொள்ளாச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சதீஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் 4 பேரும் பொள்ளாச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். மகாலட்சுமி கோவையில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.திடுக்கிடும் தகவல்கள்

இந்த வழக்கு குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

நாகராஜின் மகள் மகாலட்சுமி 2 ஆண்டுகளாக சதீசை காதலித்து வந்தார். இதை அறிந்த நாகராஜ் மகளை கண்டித்தார். ஆனாலும் மகாலட்சுமி, சதீசுடன் சுற்றித்திரிந்தார். இவர்களின் காதலுக்கு மகாலட்சுமியின் தாய் பிரமிளா ஆதரவு தெரிவித்துள்ளார். நாகராஜிக்கு எழுத படிக்க தெரியாது என்பதால் அவர் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க மகாலட்சுமியை தான் அழைத்துச்செல்வார்.

இதனால் மகாலட்சுமி தனது காதலனுக்கு தந்தையின் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுத்துக் கொடுத்து மோட்டார் சைக்கிள் வாங்கும்படி கூறியுள்ளார். அதோடு அவரது செலவுக்கு வீட்டில் இருந்து நகைகளையும் எடுத்து கொடுத்துள்ளார். மோட்டார் சைக்கிளில் காதலர்கள் ஜாலியாக சுற்றித்திரிந்துள்ளனர்.விரட்டி விட்டார்

நாகராஜிக்கு தனது கணக்கில் பணம் குறைவதையும், வீட்டில் இருந்த நகைகள் காணாமல்போவதையும் கண்டுபிடித்துவிட்டார். அப்போது மகாலட்சுமியை கண்டித்ததற்கு அவரது தாய் மகளுக்கு ஆதரவாக பேசினார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ், தனது மனைவி பிரமிளா, மகள் மகாலட்சுமி ஆகியோரை வீட்டை விட்டு விரட்டிவிட்டார். உடனே சதீஷ் அவர்களை மலுமிச்சம்பட்டியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கவைத்தார்.ரூ.1½ லட்சம் பேரம்

தொடர்ந்து மகாலட்சுமி தனது காதலன் சதீசிடம், எனது தந்தை உயிரோடு இருக்கும் வரை நாம் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ முடியாது, சொத்துகளையும் தரமாட்டார். எனவே அவரை கொலை செய்துவிடு என தெரிவித்தார். நகைகளை அடகு வைத்து ரூ.1½ லட்சம் பணம் தருகிறேன், ஆட்களை வைத்து கொலை செய்துவிடு என்று பேரம் பேசி உள்ளார்.

இதன்படி சதீஷ் தனது நண்பர்கள் 4 பேர் உதவியுடன், அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மகாலட்சுமியின் தாய் பிரமிளாவையும் தேடி வருகிறோம்.  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
news source dailythanthi

No comments:

Post a Comment

FREE DOWNLOAD