snapdeal

Sunday, December 4, 2016

டியூசன் சென்டரில் படிக்க வந்த மாணவி பாலியல் பலாத்காரம்; பட்டதாரி வாலிபர் கைது ஆபாச படம் எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பியதால் சிக்கினார்||Read-on-tiyucan-centerStudent-who-had-been-rapedGraduate

டியூசன் சென்டரில் படிக்க வந்த மாணவி பாலியல் பலாத்காரம்; பட்டதாரி வாலிபர் கைது ஆபாச படம் எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பியதால் சிக்கினார்||Read-on-tiyucan-centerStudent-who-had-been-rapedGraduate





பாலக்கோடு,
டியூசன் சென்டரில் படிக்க வந்த மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்து, அந்த ஆபாச படத்தை ‘வாட்ஸ்அப்பில்‘ வெளியிட்ட பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
பாலியல் பலாத்காரம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 26). பட்டதாரி. இவர் டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். கடந்த 2014–ம் ஆண்டு இவரிடம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த ஒரு மாணவி 10–ம் வகுப்பு தோல்வி அடைந்ததால் டியூசன் சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியை சிவக்குமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
அதை செல்போனில் படம் பிடித்து தான் அழைக்கும் போது வரவேண்டும் என்று கூறி மாணவியை, வாலிபர் மிரட்டி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் ஆபாச படத்தை சிவக்குமார் ‘வாட்ஸ்அப்பில்‘ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த மாணவியின் பெற்றோர் மகளிடம் கேட்டுள்ளனர். அப்போது நடந்த சம்பவம் குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
வாலிபர் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாவாயி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது மாணவியை, சிவக்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததும், ‘வாட்ஸ்அப்பில்‘ ஆபாச படத்தை வெளியிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
தற்போது இந்த மாணவி தர்மபுரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2 ஆண்டுகளுக்கு பிறகு மாணவியின் ஆபாச படத்தை ‘வாட்ஸ்அப்பில்‘, சிவக்குமார் வெளியிட்டு சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


No comments:

Post a Comment

FREE DOWNLOAD