தற்போதய செய்திகள்
பெண் காவலர் மீது ஆசிட் வீச்சு... மர்மநபர்கள் வெறிச்செயல்.. வேலூரில் பரபரப்பு !
வேலூர், திருப்பத்தூரில் பெண் காவலர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிட்டை வீசிய மர்ம நபர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி.விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் லாவண்யா. இந்நிலையில் இன்று மாலை பணிமுடிந்து அவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத இருவர் லாவண்யா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
மர்மநபர்கள் ஆசிட் வீசியதில் பெண் காவலர் காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.
தப்பியோடிய மர்மநபர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment